Wednesday, December 16, 2009

புதிரான "திறந்த நிலை பல்கலை கழகம் "

ல்லோரும் பட்டப்படிப்பு படிக்கணும்னு ஒரு நல்ல யோசனையின் விளைவா பிறந்தது தான் "திறந்த நிலை பல்கலை கழக" முறை!

அதாவது... பத்தாம் வகுப்போ அல்லது அதற்கு கீழோ படித்து கொண்டிருக்கும் ஒரு மாணவன்/மாணவி (நாம இங்கே போதுமொழியாய் மாணவர்னே வெச்சுக்குவோம்) மேற்கொண்டு படிக்க முடியாதபடிக்கு குடும்ப சூழலோ, நோய்வைப்படுதலோ, பொருளாதார மந்த நிலையோ ஏற்பட்டு படிப்பு தடைபடுதுன்னு வெச்சுக்குவோம்..

அவங்க சில பல காலம் கழித்து, நல்ல நிலைக்கு வந்தப்புறம் - அல்லது சிறு வயசிலேயே வேலைக்கு போயி சம்பாதிச்சு குடும்பத்தை காக்க வேண்டிய சூழலால் படிப்பை விட்டு வேலைக்கு போயி ஒரு நல்ல நிலைக்கு வந்தப்புறம் - ஒரு உள்ள குறையாய் இந்த பட்ட படிப்பு ஆர்வம் மனசுக்குள்ளே ஒரு ஓரமா தங்கி கிடந்தது தவிதவிக்கும்!

அட... என்ன வசதி இருந்து, வேலை இருந்து என்ன.. ஒரு பட்டப்படிப்பு படிக்க முடியலையேன்னு...  இதுக்கோசரம் தான் தொடங்குனாங்க "திறந்த நிலை பல்கலை கழகம்".  உனக்கு முறையான படிப்பு இல்லேன்னாலும் பரவாயில்லை... 18 வயசு முடிஞ்சிருந்தா பட்ட படிப்பு, 21 வயசு முடிஞ்சிருந்தா பட்ட மேற்படிப்பு படிச்சு உன்னை நீயே மெருகேத்திக்கொன்னு, அற்புதமான திட்டம்!  ஆனா அதுக்காக எல்லோரையும் பட்ட படிப்பு படிக்க அனுமதிக்கலை... அவனுக்கு படிக்க ஆர்வம் இருக்கா.. புரிஞ்சுக்கிறானான்னெல்லாம் தெளிவா தெரிஞ்சுக்கறதுக்காக ஒரு முன்படிப்பு கொடுத்து அதுக்கு ஒரு தேர்வு வெச்சு அதில் பாசாகுற பிள்ளைகளை தான் பட்டப்படிப்புக்கு அனுமதிக்கிறாங்க!  அந்த முன்படிப்புங்கறது +2 ரேஞ்சுலே இருக்கும்.

இந்த திட்டம் மூலமா படிச்சு பட்டம் வாங்கி நல்ல வேளையில் சேர்ந்தவங்க, அட அரசாங்க வேலை, IAS, IPS, பாசாகி அதிகாரிகள் ஆனவுங்க அதிகம் பேரு.

இப்போ ஒரு சிக்கல் வந்து தொலைச்சிருக்கு!

தமிழ்நாடு திரைப்பட கல்லூரியில் முதல்வரா இருந்தவரு இது போல "திறந்த நிலை பல்கலை கழகம்" மூலமா முதுகலை பட்டம் பெறவரு... அவரை அந்த பதவிக்கு தேர்ந்தெடுத்தது செல்லாதுன்னு ஒரு நல்ல மனசுக்காரறு கேசு போட, நீதிமன்றம் அந்த முதல்வர் வேலைக்கு டாடா சொல்லிருச்சு!

இதுக்கிடையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் தேவையில்லாம ஒரு விளக்கத்தை பல்கலை கழக மானிய குழுகிட்டே கேட்டுது.... நாங்க அரசு பணிக்கு ஆள் எடுக்கறதா இருக்கோம்... திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலமா வாங்குற பட்டம் செல்லுமான்னு, கொஞ்சம் பாத்து சொல்லுங்கன்னு கேட்டுச்சு...

வந்தது வினை!

முறையா +2, PG, UG ன்னு படிச்சா தான் பட்டம் செல்லும், மத்தபடி திறந்த நிலை பல்கலை கழக பட்டமெல்லாம் செல்லாதுன்னு அவங்க ஒரே போடா போட, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் அப்படி படிச்சு தேர்வானவங்களை தனியே லிஸ்ட்டு போட்டு, உங்க படிப்பு செல்லாது.. சாரின்னு சொல்லிடிச்சு!

இப்போ புதுசா எடுக்கறவங்களுக்கு இந்த உத்தரவு சரி! ஏற்கனவே இந்த மாதிரி படிச்சு வேலையில் பதவியில் இருக்கிறவங்க கதி??? பதிலை காணோம்!

இப்போ புதுசா 38 நீதிபதிகள் தேர்வு வேற நிறுத்தி வெச்சிருக்காங்க!

தமிழக அரசு இதே மாதிரியான ஒரு சூழல் வந்தபோது, ரெகுலரா படிச்சாலும் சரி, திறந்த நிலை பல்கலை கழகத்தில் படிச்சாலும் சரி, படிச்சு பட்டம் வாங்கிட்டா அவரை பட்டதாரின்னு ஒரே தராசில் வெச்சு தான் பார்க்கனும்னு தெளிவா ஒரு உத்தரவை முன்னாடி போட்டு இருந்தது!

ஆனா இப்போ வந்திருக்கிறது நீதிமன்ற உத்தரவாச்சே?? ஒன்னும் பண்ண முடியலை...

இப்போ (வழக்கம் போல விடை தெரியாத) கேள்விகளுக்கு வருவோம்:

முதல் முதலில் "திறந்த நிலை பல்கலை கழகம்" திட்டத்துக்கு அனுமதி கொடுக்கும்போது, இந்த வித்தியாசங்கள் தெரியலையா??

காசு கொடுத்து வருஷ கணக்கில் படிச்சு எக்சாமையும் அர்ரியரையும் புராஜெக்ட் வர்க்கையும் முடிச்சிட்டு பட்டம் வாங்கி சந்தொஷப்பட்டவன் எல்லாம் பாவம் பண்ணினவனா??

UGC இப்போ கொடுத்து இருக்கிற விளக்கத்தை அப்பவே கொடுத்து இருந்தா... நேரடியா PG பண்ணாம +2, UG, PG ன்னே பண்ணி தொலைச்சிருக்கலாமே... இப்போ கடந்து போன வயசை திரும்ப பெற முடியுமா??

பேப்பரில் எல்லாம் பக்கம் பக்கமா வருஷா வருஷம் விளம்பரம் செஞ்சிச்சே எல்லா பல்கலை கழகங்களும், அப்போ இந்த UGC என்ன பண்ணிட்டு இருந்தாங்க??

சட்டம் எல்லோருக்கும் பொதுவானதுன்னா... ஏற்கனவே திறந்த நிலை பல்கலை கழகத்தில் படிச்சிட்டு அதிகாரிகளா இருக்கிறவங்களை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கிறது ஏன்?

திறந்த நிலை பல்கலை கழகத்தில் படிக்கிற பாடத்துக்கும், ரெகுலரில் படிக்கிற பாடத்துக்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லாதபோது, ரெகுலர் பட்டம் செல்லும், திறந்த நிலை பட்டம் செல்லாதுன்னு சொல்றதுக்கான தெளிவான காரணம் என்ன??  இரண்டும் எந்த வகையில் வித்தியாசப்படுது??

பாதிக்கப்பட்டு நிற்கும் பல லட்சக்கணக்கான பட்டதாரிகளின் எதிர்காலம் என்ன??

தமிழக உயர் கல்வி துறையோ... மத்திய கல்வி துறையோ... பல்கலை கழக மானிய குழுவோ... மேன்மை தாங்கிய "நீதி" மன்றங்களுக்கோ..... யாருக்காவது இந்த கேள்விகளுக்கு பதில் தெரியுமா??

1 comment:

  1. unga kelvigal niyayamaanavai but who will answer??

    i too have same set of question what you are asking :(

    please remove word verification

    ReplyDelete

Printfriendly