Monday, February 1, 2010

நாமும் நமது கல்வி கொள்கையும்!

இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளை கடந்துவிட்டது.  அரசியல் சாசனம் சில அடிப்படை கடமைகளை அரசாங்கங்களுக்கு சொல்கிறது.  அவற்றுள் ஒன்று பதினான்கு வயது வரையிலான பிள்ளைகளுக்கு தங்கள் பகுதியில் கட்டாய இலவச தாய்மொழிவழி கல்வி கொடுக்கப்படவேண்டும் என்பதும் ஒன்று!  இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கேரளம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நூறு சதவீத கல்வி அறிவு இல்லை.  ஆக, அரசியல் சாசன கடமையை நாம் ஒழுங்காக சரிவர செய்யவில்லை என்பது எல்லா மாநில அரசுகளுக்கும் பொதுவான விஷயமாக ஆகி விட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் என்று ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது.  முதியோர் கல்வி, மகளிர் கல்வி, வேலைக்கு செல்வோருக்கான இரவு பாடசாலை, மழலையர் கல்வி, குழந்தைகளுக்கான கட்டாய கல்வி என்று பல பல திட்டங்களை ஒருங்கிணைத்து அனைத்து பிரிவினரும் கல்வி அறிவு பெற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்.  அந்த திட்டமும் எதிர்பார்த்த பலனை தரவே இல்லை.

திறந்த நிலை பல்கலைகழக திட்டம் என்பது பெரும் வரவேற்பை பெற்ற திட்டம்.  வேலைக்கு செல்லுவோர் தங்கள் கல்வி அறிவை மேலும் மெருகேற்றி கொள்ள ஒரு நல்வாய்ப்பாக அமைந்த சிறந்த திட்டம்.  ஆனால் அப்படி திறந்த நிலை பல்கலை கழகங்கள் மூலம் பெறப்படும் பட்டங்கள் செல்லாது என்று நீதிமன்றங்கள் அதிரடி தீர்ப்புகளை அளித்து வருகின்றன.  அதனை எதிர்த்து எந்த மனுவையும் எந்த அரசும் இதுவரை செய்யவில்லை.  இதன் மூலம் திறந்தநிலை பல்கலை கழகங்களில் பயின்றவர்களின் எதிர்காலமே கேள்வி குறியாக இருக்கிறது.

சமீப அதிர்ச்சியாக நிகர் நிலை பல்கழகங்கலாக செயல்படும் பல கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.  அத்தகைய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயின்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமும் இப்போது கேள்வி குறையாக நிறுத்தப்பட்டு இருக்கிறது!

இவை தவிர, இப்போது இயங்கி வரும் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் எந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் வெறுமனே மனப்பாட பகுதியாக பாடங்கள் பயிற்றுவிக்க பட்டு, மாணவர்களை ஒப்பித்து மனனம் செய்து தேர்வு எழுதும் இயந்திரங்களாக மாற்றும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.  பட்டம் பெற்ற மாணவர்கள் கூட வங்கியில் ஒரு வரைவோலை எடுக்க திணறும் நிலையிலே இருக்கிறது இன்றைய கல்வி தரம்.  அதனை மேம்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை, இதுவரை.

ஐந்து விதமான பாட திட்டங்களை கொண்டுள்ள நாம், ஒவ்வொரு பாட திட்டத்துக்கும் தனி தனியான தரங்களை நிர்ணயித்துல்லத்தான் மூலம், ஒரே வகுப்பில் பயிலும் வெவ்வேறு பாட திட்ட மாணவர்களின் அறிவு திறன்களில் வித்தியாசத்தை ஏற்படுத்தி வைத்து இருக்கிறோம்.  கிராமப்புற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய கல்வியை வழங்க மறுத்து, கிடைக்கிற கல்வியை அரைகுறையாக கற்கின்ற சூழலை ஏற்படுத்தி, அவர்களது மன வளர்ச்சியையும் அறிவு வளர்ச்சியையும் தடை செய்து வைத்து இருக்கிறோம்.

இப்படியான சூழலில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பாரதி உயிரோடு இருந்திருந்தால் என்ன பாடியிருப்பார் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

நம் பிள்ளைகளுக்கு அறிவுசார் கல்வியை ஒழுங்காக கொடுக்க முடியாத சமுதாயத்தில் நாம் இருந்து கொண்டு இருக்கிறோம் என்பதை நாம் எப்போது தான் உணர்வது??  அதை மாற்றுவதற்கான, சிறந்த அடிப்படை களிவியை கொடுப்பதற்கான ஏற்பாடுகளுக்கு அரசை தூண்டும் வகையில் வலியுறுத்துவது யார்??  நாம் என்ன செய்ய போகிறோம்??? கிடைத்ததை படித்து, மற்றவர்களை பார்த்து பெருமூச்சு விடும் கிராமப்புற மாணவனின் மனக்குறையை யார் மாற்றுவது??  இத்தகைய பொறுப்பற்ற சமுதாயத்தின் பிரதிநிதியாக நாம் இருப்பதை எண்ணி நம்மால் வெட்கமாவது பட முடிகிறதா???  எதற்கும் எனக்கு விடை தெரியவில்லை.

No comments:

Post a Comment

Printfriendly