Thursday, February 18, 2010

டீ கடை சிந்தனைகள்!

இன்னைக்கு காலையில் டீ குடிக்க வழக்கமான டீ கடைக்கு போனேன்.. அங்கே தான் அரசியல் பொருளாதாரம்ன்னு அத்தனை விவாதங்களும் நடக்கும்... நாலு ரூபாய் டீக்கு நாற்ப்பது விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம்.  எனக்கு தெரிஞ்சு டீ மாஸ்டர்களை விட பெட்டரான அரசியல் விமரிசகர்களே கிடையாது.  அத்தனை பார்டி பத்தியும் மக்களோட மன ஓட்டத்தை பத்தியும் ஜஸ்ட் லைக் தட் தெரிஞ்சு வெச்சிருக்காங்க!

ஆனா இங்கே மேட்டர் அரசியல் கிடையாது!

எந்த ஊருக்கு போனாலும் ஒரு மலையாளி டீ கடை கண்டிப்பா இருக்கும்னு சொல்லுவாங்க... டென்சிங் இமையமலை போனப்ப கூட அங்கே ஒரு மலையாளி டீ வித்துட்டு போன மாதிரி கார்டூன் கூட பிரபலம்.

ஆனா மலையாளிகளை விட இஸ்லாம் சகோதரர்களின் டீ கடைகள் தான் நான் அதிகமா பாக்கிறேன்... அவங்க டீக்கு ஒரு தனி டேஸ்ட் இருக்கு. குடிச்சு பாருங்க தெரியும்.

தமிழ் நாட்டை பொறுத்தவரைக்கும் இந்த ரெண்டு பேர் தவிர அதிகமா டீக்கடை நடத்தறவங்க பத்தி தான் இப்போ யோசனை.

சிவன்கங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் காரங்க தான் சென்னையில் அதிகமா டீ கடை வெச்சிருக்காங்க... என்ன காரணம்னு பார்த்தா... அந்த மாவட்டங்கள் எல்லாமே தொழில் துறையில் ரொம்ப பின் தங்கி இருக்கு.. அந்த மாவட்டத்தை சேர்ந்தவங்க பெரும்பாலும், வேலை தேடி மும்பை போறது, கோயம்பத்தூர், சென்னைன்னு போறது, அப்புறம் ஒன் ஸ்டெப் பார்வார்டா மலேசியா துபாயன்னு போறதுன்னு சம்பாத்தியத்துக்கு வழி தேடிட்டு இருக்காங்க.  அப்படி எல்லாம் போக முடியாதவங்க.. அல்லது அப்படி போயி நொடிஞ்சு போனவங்க, ஆல்டைம் ஹிட்டான டீக்கடை நடத்துறாங்க.

சென்னையில் நிறைய கடைகள் அவங்க தான் நடத்தறாங்க... இது பெருமை படவேண்டிய விஷயமா... இல்லே, சில குறிப்பிட்ட மாவட்டங்களை மட்டும் நாம தொடர்ந்து புறக்கணிச்சிட்டு வர்றோமேன்னு ஆதங்கப்படவேண்டிய விஷயமான்னு நீங்களே முடிவு செஞ்சிக்கலாம்.

டீ கடை நடத்தறதோட, கம்பைண்டா டிபன் கடையும் சேர்த்து நடத்துறது அவங்க ஸ்பெஷாலிட்டி.  கோயம்பத்தூர் ஏரியாவில் பார்த்தீங்கன்னா டீ கடையோடு சேர்ந்து பேக்கரி ஸ்நாக்ஸ் ஐட்டம் மட்டும் தான் இருக்கும்... ஆனா சென்னையில் டீ கடையிலேயே காலையிலும் சாயந்தரமும் இட்லி வடை பூரி கிடைக்கும்...  சென்னையில் பெரும்பாலும் வேலைக்கு போற பேச்சிலர்ஸ் தான் இருக்காங்கங்கறதால், அவங்களுக்கு சீப் அண்ட் பெஸ்ட் டிபன் இந்த மாதிரி டீ கடையில் தான் கிடைக்குது.


எப்படி மளிகை கடை நடத்தறவங்க பெரும்பாலும், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை செர்ந்தவன்களோ அந்த மாதிரி டீ கடை நடத்தரவங்களும் குறிப்பிட்ட மாவட்டத்து காரங்கன்னு ஆயிபோச்சு சென்னையில்.

கொஞ்சம் பேரு, (திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்து காரங்க) சலூன் கடையும் வெச்சிருக்காங்க.... எதையாவது செஞ்சு பொழப்பை பாத்துக்கனுமேன்னு இல்லாம, அதையும் பெர்பெக்டா செஞ்சு பிரபலமா இருக்காங்க அவங்கவங்க ஏரியாவில்.





இதில் இன்னொரு விஷயம்... கடை வாடகை கொடுத்து கட்டுபடியாகாதுன்னு நினைக்கிற நிறைய பேரு, வீட்டிலேயே டீ ரெடி பண்ணி, சைக்கிளில் கேன் கட்டி, அம்பத்தூர், கிண்டி மாதிரியான தொழில்பெட்டையில் இருக்கிற கம்பனிகளுக்கு டீ சப்பிளை பண்றாங்க. 

அது, நிரந்தர வருவாய், கேரண்டீயான கஸ்டமர்கள், மாசமாசம் காசுன்னு சிக்கல் இல்லாம போயிட்டு இருக்கு!  காலையில் ஒரு நடை மதியம் ஒரு நடை அவ்வளவு தான் மேட்டர் ஓவர்.  ஆனா அது அவ்வளவு சுளுவான காரியம் இல்லை.  அத்தனை கம்பெனியிலும் ஒரே டைமை தான் டீ டைம்னு ஒதுக்கி தொலைச்சிருப்பாங்க... அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே அத்தனை கம்பெனியிலும் அத்தனை பேருக்கும் டீ சப்பிளை பண்றது லேசு பட்ட காரியம் இல்லை.  ஸ்பீடு வேணும்.  அதை விட கொடுமை, ஒவ்வொரு கம்பெனியில் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதம்... டீ, காபி, சுகர் இல்லாம, பால் மட்டும்னு ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மெனு கார்டு வெச்சிருப்பாங்க... அதையும் ஒவ்வொரு நாளும் கேட்டுட்டு இருக்க முடியாது... டென்சன் ஆயிடுவாங்க.... அதை எல்லாம் ஞாபகம் வெச்சு யாருக்கு என்னன்னு கரெக்டா கொடுக்கணும். 


இத்தனை போட்டியிலும், இசுலாமியர்களின் டீக்கடைக்கு மட்டும் ஒரு தனி ஈர்ப்பு இருக்குன்னா அவங்க கொடுக்கற எக்ஸ்டிரா ஸ்பெஷல் டீ வகைகள்... இஞ்சி டீ, மசாலா டீ மாதிரி... தனி தனி டேஸ்டில் எல்லோருக்குமான டீயை ரெடி பண்ணி அசத்துறாங்க.

டீ ரேட்டு ஏறிட்டு இருக்கிற ஸ்பீடை பார்த்தா வேலையை ரிசைன் பண்ணிட்டு அந்த தொழிலில் இறங்கிறலாமான்னு யாருக்கு வேணும்னாலும் தோணும்.  ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரெண்டு ரூபாய்க்கும் குறைவா இருந்த டீ விலை,  இப்போ அஞ்சு ரூபா கொடுத்தா தான் ஆச்சுன்னு நிக்குது.  பஜ்ஜி கூட நாலு ரூபா ஆயிடிச்சு.. பால் விலை, சக்கரை விலை, சம்பளம்னு அவங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்க தான் செய்யுது.

ஆனா சமீபத்தில் என்னை பிரமிக்க வெச்ச விஷயம் ஒன்னு கோயம்பத்தூரில் ஒளிஞ்சு இருந்தது...

டவுன் ஹால் மணிக்கூண்டு கிட்டக்க கோணியம்மன் கோவில் பக்கத்தில் ஒரு காம்பிளக்ஸ்.  அதுக்குள்ளார கடைசியில் ஒரு சின்ன டீ கடை, பேரு, லக்ஷ்மி டீ ஸ்டால்.   சாயந்தரம் ஆனா கூட்டம் கும்மி அடிக்குது.  என்னை சமீபத்தில் தான்  முதல் முதலா ஒரு நண்பர் அங்கே கூட்டிட்டு போனாரு, வந்து பாரு இந்த ஆச்சரியத்தைன்னு.

டீ விலை ரெண்டே ரூபாய், வடை பஜ்ஜி எல்லாம் ரெண்டு ரூபாய் தான்.  டீ ஒரு வேளை கொஞ்சமா கொடுப்பாங்களோன்னு பார்த்தா சராசரியை விட ஜாஸ்த்தியா தான் இருந்தது... அதை விட ஆச்சரியம் டீயோட டேஸ்ட்டு.  இதில் மூணு பேருக்கு சம்பளம் வேற... டீ டோக்கன் கொடுக்க ஒரு ஆளு, மாஸ்டர் ஒருத்தரு, டீ சப்பிளையர் ஒருத்தரு....   அடுத்த ஆச்சரியம் விலை பட்டியல் போர்டில் இருந்தது... அந்த விலை எல்லாம் 2006 ஆம் வருஷத்தில் இருந்து எந்த மாற்றமும் இல்லாம இருக்குது... ஆடி போயிட்டேன்... 

இந்த விலையில் இவ்வளவு அருமையான டீ இவங்களால் தர முடியுதுன்னா... அஞ்சு ரூபா வாங்கிட்டு டீன்னு சொல்லி டீ மாதிரி தர்றவங்களை நினைச்சா ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு. 

ஆத்திரம் வந்து என்ன பண்ண... வாங்க ஒரு டீ சாப்பிட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்!

2 comments:

  1. Nanum Chennaiyel oru Tea Kadai Vaikalamunum Thonuthu

    Thanks

    B.saravanan

    ReplyDelete
  2. Nice experience that you have share with us bro 💪

    ReplyDelete

Printfriendly