Monday, February 1, 2010

புறம்போக்குக்கு பட்டாவாம்!

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு அதிரடி அறிவிப்பு அரசாங்கத்தில் இருந்து! 

தொடர்ந்து மூணு வருசமா புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தா அதுக்கு பட்டா கொடுத்துருவாங்க!  இதுவரைக்கும் அஞ்சு வருசம்னு இருந்த கால கெடுவை மூனா கொறைச்சிருக்காங்க!  கால கொடுமை!

புறம்போக்கு நிலம்ன்கறதே அரசாங்க சொத்து தான்.  நிதி நிலை அறிக்கையில் காட்டுற அரசானத்தோட அசையா சொத்துக்களில் அதுவும் அடக்கம்.  அதை ஆக்கிரமிக்கிறதே சட்ட விரோதம்.  நியாயமா பாத்தா அப்படி ஆக்கிரமிச்சிருக்கறவங்களை ஓடவிட்டு சுளுக்கு எடுக்கணும். அந்த நிலத்தை மீட்டு வெளி கட்டி அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரணும். 

பிற்காலத்திலே கம்பெனியோ பள்ளிக்கூடமோ கட்டனும்னா முதலில் இது மாதிரி அரசு புறம்போக்கு நிலத்தில் கட்ட டிரை பண்ணனும்.. அது வசதியா இல்லைன்னா தான் மத்தவங்க நிலத்தை கையகப்படுத்தனும்!

இப்போ என்னடான்னா... நீ ஆக்கிரமிச்சு வெச்சு இருக்கியா?? நீயே வெச்சுக்கோன்னு சட்டமே போட்டுட்டாங்க.   அரசாங்கத்தை ஏமாத்த தெரிஞ்சவன் சமத்து.  ஏமாத்த தெரியாதவன் ஏமாளின்னு அரசாங்கமே அங்கீகாரம் கொடுக்குது!  எங்கே போயி முட்டிக்கிறது?

தரிசா கிடக்கிற நிலத்தை எல்லாம் பண்படுத்தி ஏழை விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய இலவசமாக கொடுக்க போறேன்னு சொல்லிச்சு அரசாங்கம்.  நம்பின விவசாயிகள் மனசை புன்படுத்தினது தான் மிச்சம்!

இப்போ என்னடான்னா... 'கடந்த மூணு வருசத்திலே' யாரெல்லாம் அரசாங்க நிலத்தை ஆக்கிரமிச்சீங்களோ நீங்களே வேச்சுக்கொங்கன்னு அரசாங்கம் சொல்லிடிச்சு.  மூணு வருசத்துக்கு முன்னாடியே யாரெல்லாம் பிளான் பண்ணி வளைச்சு போட்டாங்களோ???

இப்படி அரசாங்க சொத்தை இலவசமா தாரை வார்க்கிறது சரியா???  இதை பத்தி கேள்வி கேக்கிற உரிமை இங்கே யாருக்குமே இல்லை!  அரசியல் சாசனம் அப்படி யாருக்கும் அதிகாரம் கொடுக்கலை!

கணக்கு தணிக்கை அதிகாரி மட்டும் இப்படி நடந்திருக்கு, இதனால் அரசுக்கு இத்தனை கோடி நஷ்டம்னு அறிக்கை கொடுக்க முடியும். அவரும் கூட கேள்வி கேட்கவோ நடவடிக்கை எடுக்கவோ முடியாது!

எத்தனை கோடி நஷ்டம் பண்ணினா என்ன..... உங்க பணம் எங்க பணம் தானே போகுது.... போயிட்டு போகட்டும்.... நம்ம சகிப்பு தன்மையை இப்படி தானே நிரூபிக்க முடியும்???

No comments:

Post a Comment

Printfriendly