Wednesday, August 18, 2010

புறம்போக்குக்கு பட்டா கிடையாதாம்!

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு புறம்போக்கு நிலங்கள் தொடர்பாக ஒரு விசித்திரமான முட்டாள்தனமான அரசாணையை வெளியிட்டது.  அது பற்றிய விவரங்கள் ஏற்கனவே இதே மனவுரையில் புறம்போக்குக்கு பட்டாவாம்!   
என்கிற பதிவாக எழுதப்பட்டது.

நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு அதிரடி தீர்ப்பாக, தமிழக அரசின் அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறது!

பொதுவாகவே, அரசு புறம்போக்கு நிலம் என்பது அரசு சொத்து தான்.  அதனை ஆக்கிரமிப்பவர்களை அகற்றி நிலத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தான் ஒரு அரசின் கடமையே தவிர, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாலர்களுக்கே பட்டா போட்டு கொடுப்பது என்பது சட்டவிரோத நடவடிக்கையை ஊக்குவிப்பதாக தான் அமையும்.

பார்ப்போம், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு என்னவாக இருக்கிறது என்று!

Printfriendly