Saturday, June 23, 2012

முசிறி துறைமுகம்

ள்ளிக்கூடத்தில் படிச்சபோதெல்லாம் மனப்பாடமா சொல்வேன், “பண்டைய தமிழ்நாட்டு துறைமுகங்கள், தொண்டி முசிறி”ன்னு.

விவரம் தெரிஞ்ச காலம் வந்தப்போ (அதுக்காக, இப்போ உனக்கு விவரம் தெரியுமான்னெல்லாம் கேக்கப்படாது!) கொஞ்சூண்டு ஒரு டவுட்டு வந்தது. அதுக்கப்புறம் வேலைக்கு எல்லாம் போக ஆரம்பிச்சபோது, வேலை விஷயமா தமிழ்நாடு முழுதும் குறுக்கும் நெடுக்குமா அலைஞ்சபோது, அந்த டவுட்டு வலுவாச்சு!

அது என்ன டவுட்டுன்னு கேக்குறீங்களா? சொன்னா சிரிக்கக்கூடாது!

பண்டைய தமிழக துறைமுகங்களில் ஒண்ணான “தொண்டி” ராமநாதபுரம் மாவட்டத்தில இருக்கு. கடற்கரை நகரம். அதனால் அது துறைமுகமா இருக்கிறதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த இன்னொரு துறைமுகம் இருக்கே, “முசிறி” அது தான் மேட்டரு!

முசிறிக்கு ஒரு தடவை ஒரு வேலை விஷயமா போயிருந்தேன். அது திருச்சி மாவட்டத்தில் இருக்கு. இன்னும் சுருக்கமா சொல்லப்போனா, மத்திய தமிழ் நாட்டில் இருக்கு. கடல்ங்கற பேச்சுக்கே இடம் இல்லை. அப்புறம் எப்படி துறைமுகம்? இது தான் என் சில்லி டவுட்டு!

முசிறியில் ஏற்கனவே அகழ்வாராய்ச்சி எல்லாம் நடந்தது. ரோமாபுரி நாணயங்கள் பல கண்டுபிடிச்சாங்க. சில வாள்கள் எல்லாம் கண்டு பிடிச்சாங்கன்னெல்லாம் படிச்சிருக்கேன். ஆனா எப்படி?

முசிறி பக்கத்தில காவிரி ஓடுது. ஒருவேளை ஆற்று துறைமுகமா இருந்திருக்கலாம்னு நினைச்சு சமாதானம் ஆயிட்டேன்.

இது தொடர்பான என சந்தேகங்களை எல்லாம், ஆர்குட்ல டீட்டெயிலா விவாதிச்சோம். நிறைய நண்பர்கள் பல பல ஆதாரங்களை தந்து தான் எனக்கு புரிய வெச்சாங்க!

இந்த முசிறின்னு சொல்லப்படுற பண்டைய தமிழக துறைமுகம், நம்ம திருச்சி பக்கத்தில இருக்கிற முசிறி இல்லையாம். கேரளாவில் இருக்கிற கொடுங்கல்லூர் பக்கத்தில தான் முசிறின்னு (Muziri) சொல்லப்படுற பழைய தமிழக துறைமுக நகரம் இருக்காம். இதை இப்போ அழிக்கோடுன்னு அறியப்படுது. இது உண்மையிலேயே எனக்கு புதிய விஷயம்.. ஆச்சரியமான விஷயம் கூட.

ரோமாபுரை வரலாற்று நூலான “பிளினி” யில் முசிறி துறைமுகம் பற்றி குறிப்பு இருக்கு. சேர மன்னன் இமையவரம்பன் நெடுஞ்செழியன் (கி.பி 74 – 132) காலத்தில் தான் அந்த நகரம் துறைமுகம் ஆச்சு. வியாபார நிமித்தமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியா வந்தவங்க நேரா முசிறி தான் வந்து இறங்கினாங்களாம்.

அப்பல்லாம் அங்கே கடல் கொள்ளையர்கள் அதிகம் இருப்பாங்கன்னும், கப்பல்களை கரைகிட்டே நிறுத்துற வசதியில்லைன்னும், அதனால் கப்பல்களை கரைக்கு ரொம்ப தொலைவிலேயே நிறுத்திட்டு அங்கிட்டு இருந்து சின்ன சின்ன படகுகளில் சரக்குகளை கரைக்கு கொண்டு வருவாங்கன்னும், இதை அறிஞ்ச சேர மன்னன் நெடுஞ்செழியன் அதை துறைமுகம் ஆக்கினாருன்னும் அந்த புத்தகம் சொல்லுது. கி.பி.150 ல் தாலமியின் குறிப்புகளிலும் இந்த ஊரை பத்தின விவரங்கள் இடம்பெற்று இருக்கு!

சரி, இதை எதுக்கு இப்போ இங்கே பதிவா போடுறேன்னு பார்க்கிறீங்களா? என்னை மாதிரியே யாராவது அரை குறையா திருச்சி பக்கத்தில இருக்கிற முசிறி தான் பண்டைய தமிழக துறைமுகம்னு நினைச்சிருந்தா, அவங்களுக்கும் புரிய வைக்கலாமேன்னு தான்.

யான் பெற்ற தகவல் பெறுக இவ்வையகம்!

6 comments:

  1. enakku iruntha davuttu theernthu pochu nandri

    ReplyDelete
  2. Annen super ! Neenga speeda poikitte irunga ! naan vara speed la vanthu join pannikkuren ! ..........u r my inspiration to start a blog of www.vinuselvaraju.blogspot.in ! THANK YOU ! GREAT DAYS AHEAD !

    Vinu S

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி சகோதரா

    ReplyDelete
  4. நானும் அப்படிதான் நினைத்தேன்..

    ReplyDelete
  5. Ennaku eruntha davutta google la pottan nenga vanthu clear pannunathuku thanks

    ReplyDelete

Printfriendly