Wednesday, December 20, 2017

டிடிவிதி எனும் ராஜதந்திரி

எல்லாம் நல்லபடியாகத் தான் இருந்தது...

தேர்தல் நெருக்கத்தில் பிரீத்தி ரெட்டி கொடுத்த பேட்டி வெளி வரும்வரை..

அது டிடிவி மீது மறைமுகமாக பல களங்கங்களை விதைக்க வழிசெய்தது.

மருத்துவமனைக்கு வரும்போதே சுவாசம் இல்லை என்கிற அந்த பேட்டி, சசி & கோ மீது சந்தேகங்களை வளர்த்துக்கொள்ள போதுமானதாக இருந்தது.

அதன் பின் சிகிச்சை அதன் முன்னேற்றம் பற்றியெல்லாம் பிரதாப் ரெட்டி கருத்து சொல்ல 'மறுத்தது' மேலும் பல புதிய சந்தேகங்களை கிளப்ப வழி செய்தது.

இவை டிடிவிக்கு எதிரான ஒரு மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தியதில் வியப்பில்லை.

ஆனாலும் இந்த பேட்டிகள் தேர்தல் விதிமுறைகள் பட்டியலில் வரவில்லை என்பது வேறு விஷயம்.

தங்கள் மீதான அத்தனை களங்கங்களையும் துடைக்க வேண்டுமானால் மக்கள் சந்தேகப்படுவது போல ஜெ. மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருந்தார் என்பதை தகர்க்க வேண்டும்.

டிடிவிக்கு வீடியோவை வெளியிடுவதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை.

இந்த ஒற்றை வீடியோ டிடிவி மீதான களங்கத்தை துடைத்துப்போட்டதும் அல்லாமல், ஜெ நல்லபடியாக தான் இருந்தார் என்பதையும் நவம்பர் இறுதிகளில் தான் பாதிப்பு அதிகமானதையும் தெளிவு படுத்துகிறது.

ஜெ. வின் சிகிச்சை மர்மமாக இருக்கும் வரையில் தான் அதிமுக & பாஜகவுக்கு நல்லது என்கிற நிலையில் இப்போது வீடியோ வெளியானது தான் அவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நல்லது தான்.

இப்போது சந்தேகத்தின் நிழல் திசை மாறி படிகிறது.

பாதுகாப்பு படை ஏன் விலக்கப்பட்டது? யார் அதற்கான முடிவை எடுத்தது? தமிழக அரசு ஏன் மருத்துவ குழு அமைக்கவில்லை? தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த தினசரி செய்தியறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை? நிர்வாகம் ஏன் நிழல்வெளியில் நடத்தப்பட்டது? ஜெ. எதிர்த்த திட்டங்கள் ஏன் அவசர கதியில் அனுமதிக்கப்பட்டது? போன்ற பல பல கேள்விகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.

மக்களுக்கும் தெளிவு பிறந்திருக்கிறது.

அரசு அவசரம் அவசரமாக வழக்கு பதிந்திருப்பதும் அதைத்தான் உறுதி செய்கிறது.

டிடிவியின் காய் நகர்த்தல் அவர் விரும்பிய பலனை கொடுக்க தொடங்கி இருக்கிறது. அவரே எதிர்பாராத பலன்களையும் அது கொடுக்கக்கூடும்

வாழ்த்துக்கள் டிடிவி

2 comments:

  1. ஆமாம்... பாவம் இறந்த பின்னும் அந்த அம்மையாருக்கு நிம்மதி இல்லை...
    அரசியல் ஆதாயம் தேட ஆளாளுக்கு பாடாய்படுத்துகிறார்கள்.

    ReplyDelete
  2. எம்ஜிஆருக்கு மோரில் விஷம் வைத்து கொன்றார் அவரது மனைவி ஜானகி என்று எம்ஜிஆர் இறந்த பின்னரும் அவரையும் அவரது குடும்பத்தினரையும் பாடாய்படுத்தியவர்தான் ஜெயலலிதா.

    ReplyDelete

Printfriendly