Monday, January 15, 2018

ஞாநி - நாம் இழந்த நடுநிலையாளர்

ஞாநி....

காலையிலேயே பேரதிர்ச்சி தந்திருக்கிறது இவ்விடியல்

****
அருமை நண்பர் திரு காளிபிரசாத் அவர்கள் தான் ஞாநி அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்.



ஞாநியின் கட்டுரைகள் அரசியல் விமர்சனங்கள் ஆகியவை எனக்கு அதற்கு முன்பே பரிச்சயமானவை. மிக விருப்பமானவையும் கூட. ஓ பக்கங்கள் மட்டுமல்ல அவரது பேச்சுக்களையும் நான் தேடி தேடி போய் ரசித்ததுண்டு

அஷோக் நகர் வீட்டில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிறு 'கேணி கூட்டம்' நடக்கும். ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு விஷயங்கள் பற்றி பேசுவார். எல்லோருடனும் இயல்பாக பழகுவார். ஒரு நெருங்கிய நண்பர் வீட்டில் இருப்பதைப்போல அவரது வீட்டில் வளைய வரலாம். நிறைய புத்தகங்களை அங்கே தான் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டேன்.

கேணிக்கூட்டத்தின்போது எல்லோருக்கும் அங்கே தேநீர் தயாராகும். Black Tea & Lemon Tea எனக்கு அறிமுகமானதும் முதன்முதலில் பருகியதும் அவரது வீட்டில் தான்.

***

தமிழக அரசியல் வெளியில் அவர் ஒரு பார்வையாளர்.. தீவிர ரசிகரும் கூட

இன்னார் என்றில்லாமல் எல்லோரையும் விமர்சிக்கும் உண்மையான நடுநிலை கொண்டவர். ஒரு சாதாரணனின் பார்வையிலிருந்து அரசியலை பார்ப்பவர். அந்த விஷயத்தில் அவர் தான் எனது ஆதர்சமும் கூட.

எங்கு தவறு நடந்தாலும் விமர்சிப்பார். ஆனால் அந்த விமர்சினத்தில் ஒரு நாகரீகம் இருக்கும். வரம்பு மீறாத வார்த்தைகளால் பிரம்பு நெய்து விளாசும் வாத்தியார் அவர்.

***

தமிழக அரசியல் களத்தில் இது போன்ற நடுநிலை விமரிசிகர்கள் மிகமிக அரிதாகி வருகின்றனர். இப்போது ஞாநியின் இழப்பு மற்றுமொரு பேரிழப்பு தான்.

அவர் ஆத்மா அமைதியில் துயில் கொள்ளட்டும்

No comments:

Post a Comment

Printfriendly