Tuesday, March 20, 2018

பாஜக ஆட்சியின் காரணிகள்

பாஜக கடந்த 2014 ல் ஆட்சிக்கு வர காரணம் பொருளாதார காரணங்களே தவிர ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் இல்லை. ஏனெனில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை (!). வேலை வாய்ப்பின்மை பொருளாதார சீர்கேடு ஆகிய காரணங்களால் தான் காங்கிரசை மக்கள் எதிர்த்தனர் என்றொரு திடீர் புத்திசாலித்தன பதிவுகள் வர தொடங்கி இருக்கிறது..

ஊழல் இந்திய தேர்தலில் மிக முக்கிய காரணி

உதாரணம் 2ஜி. அது ஊழலே அல்ல. ஆனால் பாஜக அதை ஊழல் என ஊதி பெரிதாக்கி காங்கிரஸ் மீது மிகப்பெரிய பழியை போட்டது. மக்கள் அதை முழுமையாக நம்பி வாக்களித்தனர். (இப்போது அது ஊழல் இல்லை என்பதும் வினோத் ராயை வைத்து பாஜக ஆடிய நாடகம் என்பதும் மக்களுக்கு தெளிவாக தெரிந்தாலும் கறை கறை தான்)

மாநில அளவிலும் கூட, 1996 தேர்தலில் ஜெ தோற்க ஊழல் குற்றச்சாட்டு தான் காரணம். 2011 தேர்தலில் திமுக தோற்கவும் ஊழல் குற்றச்சாட்டு தான் காரணம்..

கடந்த 2014 தேர்தலை பொறுத்தவரை பாஜக ஜெயித்ததற்கு முக்கிய காரணங்கள்:

1. பொய்யான ஊழல் குற்றச்சாட்டுக்களால் காங்கிரசை Character Assassination செய்ததோடு தாங்கள் வந்தால் ஊழலற்ற ஆட்சி தருவோம் என வாக்களித்தது (உண்மையில் காங்கிரசை விட அதிக ஊழல்களும் முறைகேடுகளும் இப்போதைய ஆட்சியில் நடப்பது நாம் அறிந்ததே. உம். ரஃபேல்)

2. பாஜகவின் அஜெண்டாக்களுக்கு (ராமர் கோவில், காமன் சிவில் கோடு போன்றவை) அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்த பிரச்சாரம். இவை வட இந்தியாவில் இனியும் நன்றாக எடுபடும். தென்னிந்தியா சட்டை செய்யாது

3. கருப்பு பணத்தை 100 நாளில் மீட்பேன், கார்ப்பரேட் ஊழல்வாதிகளை ஒடுக்குவேன் என மாநிலத்துக்கு மாநிலம் விதம் விதமாக கொடுத்த வாக்குறுதிகள் (கார்ப்பரேட்  ஊழல்களின் பொற்காலம் இது என்பதும் குற்றவாளிகள் அரசு ஆதரவோடே வெளிநாடு சென்று பாதுகாப்பாக இருப்பதும் நீங்கள் அறிந்ததே)

மற்றபடி வேலைவாய்ப்பை வைத்தெல்லாம் ஆட்சியை மக்கள் தீர்மானிப்பதில்லை. அப்படி பார்த்தால் சிறு குறு தொழில்கள் 23% இழுத்து மூடப்பட்டு இருக்கிறதே இந்த ஒரே ஆண்டில்? அதற்காக பாஜக தோற்கடிக்கப்படும் என்கிறீர்களா? பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ள இந்நிலையில் ஏற்றுமதி முடங்கிவிட்ட சூழலில் அதெல்லாம் பாஜகவை பாதிக்கும் என நம்புகிறீர்களா என்ன?

உண்மையில் பொருளாதார நிலையை பார்த்தால், 2005-2014 மிக பிரமாதமாக இருந்ததும் 2014 க்கு பின் அதள பாதாளத்தில் வீழ்ந்ததும் எல்லோருக்குமே தெரியும்

அதேபோல வேலைவாய்ப்பு தொழில்வளர்ச்சி ஏற்றுமதி ஆகியவையும் இப்போது பாஜக ஆட்சியில் தான் சரிந்தது என்பதும் எல்லோருக்கும் தெரியும். மூடப்பட்ட தொழில் நிறுவனங்களே அதற்கு சாட்சி

பாஜகவுக்கு தேவை 275 எம்.பிக்கள். அதை ராமர் கோவில், இந்துத்துவா, இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் போகட்டும், தலித்கள் ஒடுக்கப்படுவார்கள், காமன் சிவில் சட்டம் போன்ற வழக்கமான வாக்குறுதிகளை வைத்தே வட இந்தியாவிலேயே எடுத்துக்கொள்ள முடியும்.

தென்னிந்தியாவில் 6 மாநிலங்களில் ஒரு இடம் கூட கிடைக்காவிட்டாலும் கவலையில்லை.

அடுத்ததும் பாஜக ஆட்சி தான்

காரணம் பாஜகவை ஆதரிப்பவர்களின், அவர்களின் சிந்தனைத்திறனின் தரத்தின் டிசைன் அப்படி.

No comments:

Post a Comment

Printfriendly