Sunday, April 15, 2018

ஜெ திராவிட தலைவரா ?

ஜெ திராவிட தலைவரா என்று ஒரு விவாதம்.

இதில் என்ன சந்தேகம் என தெரியவில்லை. ஜெ. நிச்சயமாக திராவிட இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவர்தான். குழப்பமே வேண்டாம்.

அவர் சார்ந்த இனத்தின் அடிப்படையில் அவரை திராவிட தலைவர் அல்ல என வாதிடுவோர் நீதிக்கட்சி பற்றி அறியாதவர்களாக இருக்கக்கூடும். இனத்தின் அடிப்படையில் அல்ல. உணர்வின் அடிப்படையிலேயே அவரது திராவிடத்துவம் தீர்மானிக்கப்படுகிறது.

திராவிட இயக்க உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு திராவிட கொள்கைகளுள் சிலவற்றையேனும் செய்ய முனைந்தவர்கள், அவர்கள் எவ்வினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களும் திராவிட இயக்கத்தின் தலைவர்களே.

***

திராவிட கொள்கைகளுள் சமூக நீதியும் ஒன்று. எல்லா இனத்தவர்க்கும் சம உரிமை.. சமத்துவம்.. எல்லாவர்க்கும் கல்வி வழங்குவதற்கான வசதிகள்..அதற்கான சட்டங்கள் என சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமையை, அவர்களுக்கு வழங்கி அவர்களையும் எல்லோரையும் போல சமூகத்தில் உயரிய இடத்தை அடைய செய்வதும் திராவிட கொள்கையே.

ஆதிக்க இனத்தினரின் அழுத்தங்களையும் மீறி, அவர்களில் ஒருவராக இருந்தும் அதை புறக்கணித்த்ய், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளுக்காக போராடி 69% இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்ததுடன், அதற்கு அரசியல் சாசன பாதுகாப்பும் பெற்று தந்த ஜெ.வை எப்படி திராவிட தலைவர் அல்ல என சொல்ல முடியும்?

திராவிட உணர்வை.. பெரியாரின் அண்ணாவின் கனவுகளை.. நனவாக்கும்  எவரும் பெரியாரிஸ்டுகளே!

விழுப்புரம் கூட்டத்தில் ஜெ ஒருமுறை சொன்னதுபோல 'இது பெரியாரின் புண்ணிய பூமி.. அவரது வழி வந்தவர்கள் மட்டுமே ஆள உரிமை கொண்ட இடம்'. இதை சொல்லி முழங்கும்போது அவரது இனம் நமக்கு ஞாபகம் வருவதில்லை. அவரது உணர்வு தான் ஞாபகம் வருகிறது. அது திராவிட உணர்வு. பெரியாரியலில் ஊறிய உணர்வு.

இது ஒன்றே போதும்.. புரட்சித்தலைவி ஜெயலலிதா திராவிட தலைவர்களுள் முக்கியமானவர்.. பெரியாரின் வழிவந்தவர் என சொல்வதற்கு.

ஏழைப்பெண்களின் திருமணம், பெண்ணுரிமை போற்றும் ஒதுக்கீடு, அனைத்து மகளிர் காவல் நிலையம், தொட்டில் குழந்தைகள், பாலூட்ட தனி அறை, விதவை மறுமணத்துக்கான உதவி என பெண்ணியம் சார்ந்த திட்டங்கள் ஆகட்டும்

தொழில் கல்வி கிராம வளர்ச்சி என சமூக நலன் சார்ந்த பிற திட்டங்கள் ஆகட்டும்

பெரியாரின் பார்வையில் பெரியாரின் சிந்தனையில் தான் செயல்பட்டு வந்திருப்பதாக உணர்கிறேன்!

என்னளவில் ஜெ திராவிட தலைவரே. ஐயமில்லை!

No comments:

Post a Comment

Printfriendly